ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை; பாட்னா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு.!

Published by
Muthu Kumar

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, மே 15 வரை பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறாக பேசியதாகக் கூறப்படும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், மே 15 வரை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுஷில் குமார் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியின் மனுவை விசாரித்த நீதிபதி சந்தீப் குமார், ஏற்கனவே குஜராத் நீதிமன்றத்தால் இதேபோன்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், அதே குற்றத்திற்காக அவரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கூறினார்.

இந்த மனு தொடர்பாக ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராகுலுக்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது, இதனை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரே குற்றத்திற்கு இருமுறை ஒருவரை விசாரித்து தண்டிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் மே 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ராகுல் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.

2019 தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் பெயர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது, மேலும் ராகுல் எம்.பி பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

1 hour ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

1 hour ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago