#TRP ‘scam’: டி.ஆர்.பி “ஊழல்” வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உத்தரபிரதேசத்தில் கைது..!

Published by
Castro Murugan

போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும்  ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் ஹன்சா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம். இந்நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் தவறு நடப்பதாக மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விசாரணையைத் தொடங்கியது மும்பை போலீஸ் தற்பொழுது  வரை ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வினய் திரிபாதி தான் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் சில சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும்  அவர்களது ஊழியர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். திரிபாதியுடன் சேர்த்து விஷால் பண்டாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபாதி இந்த ஊழலை நிகழ்த்த பண்டாரி மூலமாக தான் பாரோமீட்டர்கள் நிறுவப்பட்ட வீடுகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸ் கூறினார்.

 

 

 

Published by
Castro Murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago