Categories: இந்தியா

டிஎஸ்பிஎஸ்சி தேர்வுத் தாள் கசிந்த விவகாரம்..! காவலர்களை தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!

Published by
செந்தில்குமார்

டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடவிருந்த ஒய்.எஸ்.ஆர்.டி.பி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி போன்று ஆள்சேர்ப்புத் தேர்வுகளை வைத்து அரசு பணிசார்ந்த துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும். இந்நிலையில், கடந்த மார்ச் 5ம் தேதி உதவிப் பொறியாளர் (ஏஇ) தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர் தேர்வை மார்ச் 15ஆம் தேதி ஆணையம் ரத்து செய்தது.

இதையடுத்து, டிஎஸ்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி அங்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி (YSRTP) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இந்த வினாத்தாள் கசிந்த விவகாரத்தை தீவிரமாக பேசி வருகிறார். இந்த நிலையில், டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த சென்ற ஒய்.எஸ்.சர்மிளாவை தெலுங்கானா போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்பொழுது, காரை விட்டு இறங்கி வந்த சர்மிளா காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிதுநேரத்தில் வாக்குவாதம் முற்றியதால் காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதையடுத்து, ஒய்எஸ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், ஒய்.எஸ் ஷர்மிளா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

3 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

3 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

6 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

6 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

7 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

7 hours ago