ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதாக கூறி ஏமாற்றிய இருவர் கைது!

Published by
Rebekal

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் உத்திரபிரதேச மாநிலத்தின் கண்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த வருடம் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் கட்டுவதற்கான கட்டுமான நிதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களிடமும் இருந்து திரட்டப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், பிரபலங்களும் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியை கொடுத்து வருகின்றனர். இதுவரையில் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கிராமங்களிலும் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் சிலர் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவது ஆகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

தற்போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டுவது ஆக கூறி மக்களை ஏமாற்றியதாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இரண்டு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போலியான நன்கொடை ரசீதுகள் வழங்கி மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுபோல புலண்ட்ஷகாரிலும் போலியான நன்கொடை ரசீது கொடுத்து மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்த இருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

12 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

36 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

2 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago