ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதாக கூறி ஏமாற்றிய இருவர் கைது!

Published by
Rebekal

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் உத்திரபிரதேச மாநிலத்தின் கண்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த வருடம் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் கட்டுவதற்கான கட்டுமான நிதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களிடமும் இருந்து திரட்டப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், பிரபலங்களும் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியை கொடுத்து வருகின்றனர். இதுவரையில் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கிராமங்களிலும் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் சிலர் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவது ஆகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

தற்போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டுவது ஆக கூறி மக்களை ஏமாற்றியதாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இரண்டு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போலியான நன்கொடை ரசீதுகள் வழங்கி மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுபோல புலண்ட்ஷகாரிலும் போலியான நன்கொடை ரசீது கொடுத்து மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்த இருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

11 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago