உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘சமோசா’ வாங்க வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்று காவல் துறை தெரிவித்தனர்.
இறந்தவர்களில் மஹுவா பாட்டியாட் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அங்குல் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆகாஷின் தந்தை ராகேஷ் கமல் கூறுகையில், “எனது மகனும், அங்குலும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ‘சமோசா’ வாங்குவதற்காக சென்றபோது நல்லாதான் இருந்தார்கள் என்று கூறிய அவர் இது குறித்து காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…