இரு குழந்தைகளைப் பாதித்த கருப்பு பூஞ்சை., கண்ணை இழந்த சோகம்..!

Published by
Hema

கர்நாடகாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு….கண்ணை இழந்து தவிக்கும் குழந்தைகள்.

இந்தியாவில் கொரோனா கடந்த ஆண்டு முதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர்.  இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸின் 2 வது அலை மக்களிடையே பரவி வாட்டி வதைத்த நிலையில் தற்போது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை தொற்றுகள் கலர் கலராக பரவி மக்களை அச்சுருத்தி வருகிறது.

கொரோனா 3 வது அலையே குழந்தைகளை பாதிக்கும் என கூறிவந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் முதன் முறையாக மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்று 2 குழந்தைகளை பாதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியும், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மூத்த சுகாதார அதிகாரி கூறுகையில் அரசு போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் (ஏ.ஜே.டி) பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 2 குழந்தைகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனால் அது அவர்களுக்கு தெரியாது என்றும் சிக்கல்கள் அதிகமான  பின்னரே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 2 குழந்தைகளும் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்று சிகிச்சை அறிக்கை தெரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Hema

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago