கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அடுத்தடுத்து பல தலைவர்கள் பாதிக்கப்படுவதால் அரசியல் களத்திலும் கொரோனா பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பின் தீவிரம் பெரிய அளவில் குறைந்தபாடில்லை. தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 66,732 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் கொரோனா பெருந்தொற்றிற்க்கு பலியாகி உள்ளனர். இதில், பீகார் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கதிஹர் மாவட்டம் பிரன்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏவுமான வினோத் குமாருக்கு (55) கடந்த ஜூன் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதே போல், நாகலாந்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சி.எம். சாங்க், டைபாய்டு பாதிப்பால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நேற்று அவரது டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…