நிவர் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் .
வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிவர் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் கேட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.மேலும் நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…