மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முற்றிலும் குணமடைந்தார், விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடத்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அமித்ஷா தனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், மருத்துவர்கள் ஆலோசனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இன்று அமித்ஷா நலமுடன் உள்ளார் என்றும் ஓய்வும், சிறப்பு கவனிப்பும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் எனவும் ள்துறை அமைச்சகம் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில, தற்போது கொரோனா குணமான நிலையிலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் அமித்ஷா, முற்றிலும் குணமடைந்துள்ளார் என்றும் கூடிய விரைவில் வீடு திரும்புவார் எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…