ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்கள்.
ராஜஸ்தான்( பார்மரில் ) தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில் அவசரகால தரையிறங்கும் தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இங்கு ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும்.
பாரத்மாலா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பார்மர் மற்றும் ஜலூர் மாவட்டங்களின் கிராமங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு எல்லைப் பகுதியில் அதன் இருப்பிடம் இந்திய இராணுவத்திற்கு கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.
அவசர காலங்களில் விமானத்தை தரையிறக்க இந்திய விமானப்படையால் தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இருப்பினும், முன்னதாக 2017 ஆம் ஆண்டில், போர் விமானங்கள் ஆக்ரா-யமுனா விரைவுச்சாலையில் தரையிறக்கப்பட்டன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…