தேனிலவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை – அதிர்ச்சியடைந்த நிர்வாகம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையை முதலிரவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு அறிக்கை கேட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (JNTU-K) காக்கிநாடாவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள ஒரு அறையில் புதிதாக திருமணமான தம்பதியினர் முதலிரவு கொண்டாடுவற்காக வாடைகைகைக்கு விடப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரமளிப்புப் பிரிவின் இயக்குனர் ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார். அன்றைய தினங்களில் அந்த அறை அலங்காரம் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார்.

அந்த அறையை பயன்படுத்திய, தம்பதியினரும் அறை அலங்காரத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன், அறையை பயன்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது.

கவுரவ பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த அறை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது தொடர்பாக மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், விருந்தினர் மாளிகையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்க அதன் ரெக்டர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசும் அறிக்கை கேட்டுள்ளது.

பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அது பயன்படுத்தப்பட்ட நோக்கம் தவறானது. நாங்கள் அது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம் என்று ஜேஎன்டியு-கே பதிவாளர் ஆர். ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கையை, மாநில உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநில பெண்கள் ஆணைய தலைவியும், விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

26 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

47 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago