இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடியாக இருந்த நிலையில்,இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ரூ. 25,000 கோடி ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளது எனவும்,மேலும் சரக்கு இறக்குமதியின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 30% உயர்ந்துள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,மாநிலங்களுக்கு ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூல்,மார்ச் மாத வசூலை விட கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.08% அதிகரித்து ரூ.10,649 கோடியை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”ஏப்ரல் 2022க்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…