உ.பி:தெரு நாய்களின் உடம்பில் போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்த வேட்பாளர்கள்..!வைரலாகும் புகைப்படம்..!

Published by
Edison

உ.பி.யில் பஞ்சாயத்து வாக்கெடுப்பு வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு வேட்பாளர்கள் தெருநாய்களின் உடம்பில் போஸ்டர்களை ஒட்டி பிரச்சாரம்- விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம்.

உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்துகள், சேத்ரா பஞ்சாயத்துகள், மற்றும் ஜில பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 15 ம் தேதியும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 19, 26, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.மேலும் வாக்குகள் மே 2 ஆம் தேதி அன்று எண்ணப்படும்.

ஆகவே,இந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ரே பரேலி மற்றும் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விளம்பர  போஸ்டர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அங்குள்ள தெரு நாய்களின் மீது ஒட்டியுள்ளனர்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.பல விலங்கு நல ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்வலர்களில் ஒருவர், இவ்வாறு தவறான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதுகுறித்து பெயர் குறிப்பிடாத ஒரு வேட்பாளர் கூறுகையில்,””பிரச்சாரத்தில்  நாய்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் மாதிரி நடத்தை விதிகளில் எந்த விதியும் இல்லை. நாங்கள் எந்த வகையிலும் விலங்குகளை தொந்தரவு செய்வதில்லை. உண்மையில்,  ஒவ்வொரு நாய்களுக்கும் நாங்கள் உணவளிக்கிறோம்.நாய்களின் உடம்பில் போஸ்டர் ஒட்டியது ஒரு புதிய யோசனை அப்போதுதான் வாக்காளர்களை ஈர்க்க முடியும்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகும் நாய்களின் புகைப்படத்தைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், இவை கடுமையான தண்டனைக்குரிய குற்றம்,இவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

Published by
Edison

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

5 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

6 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

6 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

6 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

7 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

14 hours ago