Screenshots from Video [Image source : Twitter/ @Ganesh00242004]
உ.பி மாநிலத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவிக்கு தொந்தரவு அளித்த காவலரை சஸ்பெண்ட் செய்தது மாநில காவல்துறை.
உத்திர பிரதேச தலைநகர் லக்னோவின் சதார் பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை உ.பி காவலர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, மாணவியை தொந்தரவு செய்ததாக கூறப்படட்டது. இந்த சம்பவத்தை காவலர் வாகனத்திற்கு பின்னால் வந்த ஒரு பெண் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து வீடியோ எடுத்த நபர், உ.பி காவலர் ஷாதாத் அலி என்றும், பள்ளி மாணவியை தொடர்ந்து பாலோ செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்ட்டப்பட்டது. இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், சம்பந்தப்பட்ட காவலரை உபி காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு, லக்னோ டிஜிபி அபர்ணா கௌசிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ சம்பந்தப்பட்ட காவலர் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் தன் மீதான குற்றத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சஸ்பெண்ட்டில் இருப்பார்’ எனவும் டிஜிபி கூறினார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…