கையூட்டு பெற்ற 200 அரசு ஊழியர்கள் பதவி காலி..!400 பேரின் பதவி உயர்வு ரத்து -அதிரடி காட்டும் அரசு

Default Image

லஞ்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்கள் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் இந்த புகாரில் சிக்கிய  400 பேருக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

உபியில் யோகி ஆதிநாத் தலையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவர் போருப்பேற்ற நாளில் இருந்து அம்மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களையும்,அதிரடியான அறிவிப்புகளையும் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் கால் வைக்கவேண்டும் இல்லை என்றால் அவர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார்.

தற்போது  லட்சம் வாங்கிய  200  அரசு ஊழியர்களின் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் அதனுடன் தொடர்புடைய 400  பேரின் பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட பட்டுள்ளது.

நம் கையெழுத்து மற்றும் நம் கடமை விலைமதிப்பிலாது அதனை இப்படி கையூட்டு பெற்று விற்க எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை.வாங்குவது குற்றம் என்றால் கொடுப்பதும் குற்றமாகும் இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts