யு.பி.எஸ்.சி, ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IFS இந்திய வன சேவைக்கான முதன்மை தேர்வு அட்டவணை இன்று தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளமாகிய https://upsc.gov.in/ -இல் வெளியிட்டுள்ளது. இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தேர்வாணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, முதல்கட்டமாக நடைபெறும் தேர்வுகள் காலை 9 மணி முதல் 12 வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், நீல நிறம், சிவப்பு நிறம் கொண்ட பேனாக்கள் உபயோகப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பென்சில் மற்றும் மை பேனாக்கள் வைத்து எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…