இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர் ஈரான் தளபதி சுலைமானி.. டிரம்ப் புதிய குண்டு.. இந்திய அரசு மவுனம்…

Published by
Kaliraj
  • ஈரானின் இராணுவ தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகனை  தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • இந்த விவகாரத்தில் இந்தியாவையும் சேர்க்கும் அமெரிக்கா.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார்.

Image result for soleimani iran

மேலும் அவர், நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஈவு இரக்கமின்றி  கொடூரமாக கொன்றவர் சுலைமானி, மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இவர் வைத்திருத்ததார்.இவரின்  பயங்கரவாதம்இந்தியாவின்  டெல்லி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் வரை பரந்திருந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இவர் இந்தியாவை குறிப்பிட்டது  இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களை திரும்பிப்பார்க்க செய்தது. எனினும்,அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை இந்தியாவுக்கான ஈரான் தூதர் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டில் தலைநகர்  டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலானது, ஏற்கனவே ஈரானை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானியான  முஸ்தபா அகமதி ரோஷனை, கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், அமெரிக்க அதிபர்  ட்ரம்பின் இந்த  கருத்துக்கு இந்திய அரசின் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Kaliraj

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

37 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago