பிரதமரின் சொந்த தொகுதியில் நிகழ்ந்த அவல நிலை! பசியை போக்க புல்லை சாப்பிட்ட குழந்தைகள்!

Published by
மணிகண்டன்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்புசாரா தொழிலில் ஈடுபடுவோர்கள் அதாவது, தினக்கூலியாக வேலை செய்து வந்தவர்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியியான உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பசியை போக்க குழந்தைகள் புல்லை உப்பு கொண்டு சாப்பிட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

வாரணாசி தொகுதியில் உள்ள கோய்ரிபுர் எனுமிடத்தில் கட்டிட வேலையை நம்பி தினக்கூலியாக வேலை செய்யும் குடும்பங்கள் இருந்து வருகின்றன.அதில், ராணி, பூஜா, விஷால், நீர்ஹூ, சோனி, கோலு ஆகிய குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர்.  அவர்கள் குடும்பத்தினர் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள். ஆனால், தற்போது வேலையின்றி இருப்பதால், உணவின்றி அந்த குடும்பங்கள் தவித்து வந்துள்ளன. 

இதில் அந்த குழந்தைகள், ஊரடங்கின் முதல் நாள் அன்று இறந்தவரின் இறுதி சடங்கு நடைபெற்ற வீட்டில் சாப்பாடு சாப்பிட்டுள்ளார். இரண்டாம் நாள் தோட்டத்தில் உருளைக்கிழங்கு பறித்து சாப்பிட்டுள்ளனர். மூன்றாம் உணவின்றி, ஆடு மாடுகளுக்கு வழங்கப்படும் புல்லை உப்பு, தண்ணீர் கொண்டு சாப்பிட்டுள்ளனர். 

இந்த அவல நிலையினை பத்திரிக்கை நிருபர் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, அந்த மக்களுக்கு தற்போது 15 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து, தற்போது அம்மக்களின் பசி போக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை என்றால், அரசு அதிகாரிகள் செய்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago