நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு சென்ற மணிஷ் சிசோடியா, உத்தரகாண்ட் முதல்வர் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியதாகவும், அவர்கள் அவரை பூஜ்ஜிய பணி தலைவர் என்று தான் அழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
2022 உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சி அறிவித்த சில நாட்களில் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரகாண்ட் மாநில அமைச்சர் மதன் கவுசிக் ஜி, ராவத் தலைமையிலான உத்தரகாண்ட் அரசு மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் குறித்து விவாதிப்பதற்கான தனது சவாலை ஏற்றுக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தரகாண்ட் அமைச்சர் மதன் கவுசிக் ஜி இந்த சவாலை ஏற்றுக் கொண்டதோடு, அவரது அரசாங்கத்தால் செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் பற்றி விவாதிக்க முன் வந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வாய்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். கலந்துரையாடலுக்கான இடத்தையும் நேரத்தையும் என்னிடம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…