தடுப்பு பணிக்கு “5 மாத சம்பளத்தை கொடுத்த” உத்தரகண்ட் முதல்வர்.!

Published by
murugan

கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 இந்தியாவில் 1251 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள்  நிதி கொடுக்கலாம் என கூறினார்.

இதைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் ,  மற்றும் சினிமா பிரபலங்கள் தொடந்து நிதி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தனது ஐந்து மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும்  முதல்வரின் மனைவி சுனிதா ராவத் ரூ .1 லட்சம் மற்றும் அவரது இரண்டு மகள்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ .52 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால்7பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 2 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
murugan

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago