உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் 18,000 கோடி மதிப்பில் பல நலத்திட்டங்களை அங்கு இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். மாநிலத்தின் டேராடூன் எனும் நகரில் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி திட்டங்களில் 8000 கோடி மதிப்பிலான பொருளாதார வழித்தட சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு இடையூறு இல்லாத வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், 500 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லும் பிரதமர் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 120 மெகாவாட் திறனுள்ள நீர்மின் நிலைய திட்டத்தையும், நறுமண ஆய்வகத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது .
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…