பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் காணொலி வாயிலாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் நாடு முழுவதும் 18 வயதை கடந்த 79 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 38 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் கொரோனா தடுப்பு வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…