இந்தியாவில் அடுத்த மாதம் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் கிடைக்கும் எனவும், அடுத்த மூன்று மாதங்களில் 100 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 81 கோடியைத் தாண்டிவிட்டதாகவும், கடந்த 11 நாட்களில் மட்டும் 10 கோடி டோஸ் தடுப்பூசி நாட்டில் போடப்பட்டு உள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், உபரியாக உள்ள தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பணி அடுத்த காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…