பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவை மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் ரூ.95 கோடி கடன் பெற்றதாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் , பிரவீன் ராவத் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலுத்தியதும் ,சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவிற்கு ரூ.55 லட்சம் வட்டி இல்லாத கடனாக அனுப்பியதும் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ,அதை தவிர்த்து வந்தார்.இறுதியாக கடந்த 4-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அரசியலில் உள்ள எதிரிகளை துன்புறுத்துவதற்கும் ,அவர்களை மவுனமாக்குவதற்கும் மத்திய விசாரணை நிறுவனங்களான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாகவும் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…