கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் கடைசி நிமிட வீடியோ ஒன்று, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குறிப்பாக, அவர் கூறிய “Bye daddy.. Bye” என்ற வார்த்தை, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.48 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எர்ராகடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் 26 ஆம் தேதி கொரோனா தோற்றால் உயிரிழந்தார். மேலும் அவர் உயிரிழப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் “பாய் டாடி பாய் (Bye daddy bye)” என்ற வார்த்தை, காண்போரின் கண்களை கலங்கவைக்கிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “என் வென்டிலேட்டரை விட்டு எடுக்கும்போது, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று சொன்னபோதும் மருத்துவமனை ஊழியர்கள் அதை அகற்றினர். அப்பா 3 மணிநேரமாக நான் மூச்சுவிட ரொம்ப கஷ்டப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதாக உணர்கிறேன். என்னால் இதற்க்கு மேல் சுவாசிக்க முடியவில்லை. நான் இறக்கப்போகிறேன் அப்பா, பாய் டாடி பாய்” என கூறிய சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…