Categories: இந்தியா

கழிவறையில் போதைப்பொருள் உட்கொண்ட இளம்பெண்கள்.. வசமாக சிக்கிய வைரல் வீடியோ.!

Published by
கெளதம்

மகாராஷ்டிரா : புனேயில் உள்ள ஒரு பிரபல மாலின் கழிவறையில் இரண்டு இளம்பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அமைந்திருக்கும் மாலில் இரண்டு இளம் பெண்கள் போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில், போதைப்பொருளை உட்கொண்ட அந்த இரு பெண்களை, மாலில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் வெளிப்படையாக படம் பிடித்துள்ளார். அதனை கவனித்த பெண்கள் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கேட்க,  பின்னர் படம்பிடித்த பெண் ஊழியர் அவர்களை வெளியே வரும்படி அழைக்கிறார்.

முன்னதாக, புனே பெர்குசன் கல்லூரி சாலையில் உள்ள லிக்விட் லீஷர் லவுஞ்ச் (எல்3) என்ற பப்பில் இளைஞர்கள் சிலர் போதைப்பொருள் போன்ற பொருளை உட்கொண்டதைக் காட்டிய மற்றொரு வீடியோ பரவிய ஒரு நாள் கழித்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டும் இது போன்று சம்பவங்கள் நிகழ்வதால், புனேவில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறதா என்ற என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

32 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago