இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

tn rain

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (ஜூலை 16) கோவை, தேனி, நீலகிரி, தென்காசியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (ஜூலை17) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (ஜூலை 18-ம் தேதி) கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்