லடாக் :லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஆகாஷ் பிரைம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ஒரு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு.
இந்நிலையில், இன்றைய தினம் இந்த ஆகாஷ் பிரைம் வான் அமைப்பை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவால் 15,000 அடிக்கு மேல் உயரத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
லடாக்கில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்பின் உயர் உயர சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. வேகமாக நகரும் வான்வழி இலக்குகளை ஏவுகணைகள் இரண்டு முறை வெற்றிகரமாக தாக்கின.
லடாக்கில் நடந்த இந்த சோதனை, ஆகாஷ் பிரைம் அமைப்பின் திறனை உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது. இதில், புதிய ரேடியோ அலைவரிசை (RF) சீக்கர் பொருத்தப்பட்டுள்ளது, இது இலக்கை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவுகிறது.குறைந்த வெப்பநிலை மற்றும் உயரமான பகுதிகளில் சிறப்பாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து, எதிர்களின் விமானங்கள், ட்ரோன்கள், மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற பல வான்வழி அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியும். இந்த அமைப்பு முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் போது அதன் செயல்பாட்டு வெற்றியை நிரூபித்தது, அங்கு சீன ஜெட் விமானங்கள் மற்றும் துருக்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இராணுவத்தின் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இது உதவியது.
unknown node