Tag: indian army

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் கொல்லப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேல் மாவட்டத்தில் நேற்றிரவு (மே 14 அன்று) ஆயுதமேந்திய குழுவினர் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவல் […]

#Manipur 3 Min Read
10 militants killed in Manipur

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ”பார்கவஸ்த்ரா” ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த ‘பார்கவஸ்த்ரா’ ராக்கெட் வானில் பறந்த டிரோனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. மே 13 அன்று மூத்த ராணுவ வான் பாதுகாப்பு (AAD) அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனைகளில், மூன்று சோதனைகளில் ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகளுமே வானில் பறந்த டிரோன்களை அழித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்கவஸ்த்ரா 2.5 கி.மீ தூரம் வரை சிறிய ட்ரோன்களைக் கண்டறிந்து […]

#Odisha 3 Min Read
Bhargavastra

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை அதிகாரிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரு நாடுகளின் எல்லைகளிலும் நிலைமை எப்படி இருக்கிறது? போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? வீரர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன? இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்பொழுது, […]

AN Pramod 4 Min Read
AN Pramod -Operation sindoor

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதியிடம் கேட்டபோது, ”தாக்குதல் நடத்த பாகிஸ்தான இந்திய ராணுவ நிலைகளை […]

#Pakistan 6 Min Read
Air Marshal A.K. Bharti

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நான்காவது நாளாக இன்றும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய இசைக் கச்சேரி வருவாய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா அறிவித்துள்ளார். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமையாக கருதுவதாக இளையராஜா தனது எக்ஸ் […]

#Pakistan 4 Min Read
ilaiyaraaja - india pakistan war

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அது முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டது. […]

India Pakistan Tensions 6 Min Read
Jammu Kashmir

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும், ஜம்முவின் ரஜோரி, உரி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள பொது மக்கள் வீடுகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இன்று காலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா காண்ட் மீது பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக […]

India-Pakistan war 6 Min Read
scattered missile parts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர்-ஐத் தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 26 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பயங்கரவாத ஏவுதளங்களை அழித்தது. இது தொடர்பான வீடியோவை பொது தகவல் […]

Drone Strikes 4 Min Read
Indian Army Pulverizes Terrorist Launchpads

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”பொதுமக்கள் இந்திய அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதை நாங்கள் கண்டோம். நாட்டின் குடிமக்கள் அரசு மீது விமர்சனங்கள் வைப்பது பாகிஸ்தானுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏனென்றால் இது ஜனநாயகத்தின் […]

#Pakistan 4 Min Read
Vikram Misri

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்தித்து விளக்கினார்கள். அதில் கர்னல் சோஃபியா குரேஷி பேசுகையில், ”பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி […]

#Pakistan 4 Min Read
Sofiya Qureshi

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தாக்குதல் தொடருவதால், பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர் இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி அளித்தது. கடன் வழங்க இந்தியா […]

#Kashmir 5 Min Read
Omar Abdullah - IMF

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முந்தின இரவு போலவே நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து பாக். ட்ரோன்களை […]

#Delhi 3 Min Read
Pak Lanch pad destroyed by indian army

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை ஏவிய பாகிஸ்தான் தற்போது ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து, டிரோன்களை அனுப்பி ஊடுருவுகிறது. அதாவது, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு எல்லையில் […]

#Pakistan 3 Min Read
Drones intercepted in Jammu

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது விங் கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில், ”வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது, பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா […]

#Pakistan 4 Min Read
Vyomika Singh

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில், தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. பொய்த் தகவல் மூலம் உலகை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது என […]

#Pakistan 4 Min Read
Vikram Misri

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில், இதுவரையிலான நிலவரம் என்ன? என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட களநிலவரங்கள் தொடர்பாக நம் வெளியுறவு செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் புகைப்படத்தைக் காட்டி விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, ”எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியா மீது பாகிஸ்தான் […]

#Pakistan 3 Min Read
Sofia Qureshi

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. இராணுவ விதிகள் 1948 இன் விதி 33 இன் கீழ், எடுக்கப்பட்ட இந்த முடிவு, வழக்கமான இராணுவத்தை கூடுதலாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, இராணுவத் தளபதி இப்போது அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க அல்லது வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபுரிய அழைக்கலாம். மேலும், நாட்டில் […]

Centre Authorises 3 Min Read
Army Staff

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம் காரணமாக நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் டெல்லியில் பிசிசிஐ அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு சீசனில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், […]

#Pakistan 4 Min Read
IPL 2025 - BCCI

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது, இப்படி எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, மோதல்கள் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலில், ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீர […]

#Kashmir 5 Min Read
India Pakistan War

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்தி […]

Border Security Force 4 Min Read
BSF killed 7 Terrorists in Samba J&K