ஜூலை 6 முதல் இந்தியாவில் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பிக்க அனுமதி.!

Published by
Ragi

இந்தியாவில் வரும் ஜூலை 6 முதல் யுஏஇ மற்றும் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது .

கடந்த திங்களன்று, நாட்டின் விமான சேவைகள் ஒரு கட்டமாக தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மாநில அரசுகள் மற்றும் தூதரகங்களின் கொரோனவிற்கான விதிமுறைகளை பின்பற்றி VFS குளோபல் இந்தியாவில் விசா விண்ணப்பங்களுக்கான சேவைகளை தொடங்கவுள்ளது.

அதில் பயணிகள் பெலாரஸ், டென்மார்க், டொமினிகன் ரிப்பப்ளிக், அயர்லாந்து, இத்தாலி, நோர்வே, போர்ச்சுக்கல், தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் யூனிடேட் கிங்டம் ஆகிய நாடுகளுக்கான விசா விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பிட்ட தூதரகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலின் படி VFS குளோபல் மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்று கொள்கிறது. அந்த வகையில் ஜூலை 6 முதல் UK விசா சேவைகள் நாடு முழுவதும் உள்ள 11 நகரங்களில் தொடங்கப்படும் என்று விசா அவுட்சோர்சிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த UK விசா சேவைகள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, ஜலந்தர், கொச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பையில் மகாலட்சுமியிலும், புது டெல்லியில் சிவாஜி மெட்ரோ ஸ்டேடியத்திலும் மற்றும் புனே ஆகிய இடங்களில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் துருக்கி, டொமினிகன் ரிப்பப்ளிக், தென் கொரியா, போர்ச்சுக்கல், நோர்வே, டென்மார்க் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் புது டெல்லி மையத்தில் தொடங்கப்படும் என்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் ஆன்லைன்  பயன்முறையில் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசா விண்ணப்ப மையத்திற்கு செல்வதற்கு முன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் சந்திப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு விசா விண்ணப்ப மையத்திலும் கட்டாய உடல் வெப்பநிலை சோதனைகள் இருக்கும் என்றும், அதிக காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மையத்திற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Ragi

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

37 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

49 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

13 hours ago