Categories: இந்தியா

பூர்வீகம் தமிழ்நாடு.. அரசியல் பிரவேசம் ஒடிசா.! ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனின் அடுத்த நகர்வு.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார்.

விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து  ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் நலத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தபடுகிறதா என கள ஆய்வு மேற்கொண்டு வந்தார்.  எதிர்பார்த்தது போலவே, கடந்த மாதம் (அக்டோபர்) 23ஆம் தேதி தனது ஐஏஎஸ் பதவியை வி.கே.பாண்டியன் ராஜினாமா செய்தார்.

இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படும் 554வது குரு நானக் ஜெயந்தி விழா.!

ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அமைச்சர் அந்தஸ்து கொண்ட ஒடிசா அரசாங்கத்தின் விஷன் 5T செயல்திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று புவனேஷ்வரில் உள்ள பிஜு ஜனதா தள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில், வி.கே.பாண்டியன் தன்னை பிஜேடியில் இணைத்துக்கொண்டார்.

23 வருட ஐஏஎஸ் அனுபவமுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வி.கார்த்திகேய பாண்டியன்,  ஒடிசாவில் கடந்த 23 ஆண்டுளாக ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தள கட்சியில், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து புதிய தலைவராகவும் மாற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Recent Posts

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

25 minutes ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

44 minutes ago

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…

59 minutes ago

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

2 hours ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

4 hours ago