மூடும் நிலைமையில் தவிக்கும் வோடஃபோன்.! மூடினால் நேரும் ஆபத்து.!

Published by
Dinasuvadu desk
  • ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு  92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
  • வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த  2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு  பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் மூடப்பட்டன.

சில நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR பாக்கித் தொகையால் பல நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து  தொலைத் தொடர்பு  நிறுவங்கள் இணைந்து மொத்தமாக  ரூ.1.47 லட்சம் கோடி மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  தனது AGR பாக்கித் தொகையான ரூ.60 கோடியை  செலுத்தி விட்டது. ஜியோ நிறுவனத்தால் நஷ்டத்தை சந்தித்து வரும் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் 17-ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.

இதைத்தொடர்ந்து வோடஃபோன் ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்தாவிட்டால் இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.  அப்படி வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

வோடஃபோன் நிறுவனம் 37 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் சேவைகளை கொண்டு எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. மேலும் மற்ற வங்கிகளிடம் இருந்தும்  வோடஃபோன் நிறுவனம் கடன் வாங்கி உள்ளது.

வோடஃபோன் நிறுவனம் மூடினால் அதன் சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்து குறைவான தொகைக்கு ஏலத்தில் விடுவார்கள் ஆனால் அந்த தொகை வங்கி கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது தெரியவில்லை. இந்த நிறுவனம் மூடப்பட்டால் நேரடியாக 13,500 ஊழியர்களும் , மறைமுகமாக ஏராளமான ஊழியர்களும் வேலையை இழக்கின்ற சூழல் ஏற்படும்.

தற்போது தொலைத்தொடர்பு 4 நிறுவனங்களாக உள்ள நிலையில் ஒருவேளை 2 நிறுவனங்களாகச் சுருங்கும் பட்சத்தில் அந்த 2 நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் .மேலும்  அந்த நிறுவனம் வைப்பதுதான் கட்டணம் என்ற நிலை ஏற்படலாம்.

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

20 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago