வோடபோன் நிறுவனத்திற்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்த ராஜஸ்தான் அரசு..!

Published by
murugan

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் கீழ் தகவல் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு வோடபோன் நிறுவனத்திற்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்தது.

ராஜஸ்தானில் தரவு கசிந்த வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணலால் நாயன் என்ற நபரின் வோடபோன் சிம் சேதமடைந்தது. இது குறித்து, தனது சிம்மை பெற நைன் வோடபோன் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த சிம் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் பானுபிரதாப் என்ற மற்றொரு நபருக்கு வழங்கப்பட்டது.

அந்த சிம் தனது ஓவர் டிராஃப்ட் வசதியுடன் இணைக்கப்பட்டதால் பானுப்ரதாப் நைனின் கணக்கில் இருந்து ரூ .68 லட்சத்தை எடுத்துள்ளார்.  ஐந்து நாட்களுக்குப் பிறகு நாயன் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட செய்தி தெரியவர போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து பானுப்ரதாப் கைது செய்யப்பட்டார். ரூ .68 லட்சத்தில், சுமார் ரூ .44 லட்சம் கிருஷ்ணலால் நாயனிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் மீதமுள்ள தொகை நிலுவையில் உள்ளதால், கிருஷ்ணலால் நாயன் ஐடி சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐடி மற்றும் தகவல் தொடர்பு முதன்மை செயலாளர் அலோக் குப்தா, வோடபோனுக்கு ரூ .27.23 லட்சம் அபராதம் விதித்தார். இதனுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு அபராதத் தொகையை நிறுவனம் வழங்காவிட்டால், மாதத்திற்கு 10 சதவிகித வட்டியை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

29 minutes ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

1 hour ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

2 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

3 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

5 hours ago