சபரிமலையில்,வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி நடை திறக்கப்படும் எனவும்,ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் வரை,ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5000 பக்தர்களுக்கு தினசரி அனுமதி வழங்கப்பட்டு வந்தது.எனினும்,சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று முதல் மே 16 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த முழு ஊரடங்கின்போது அனைத்து கடைகள் மற்றும் மத வழிப்பாடு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.
இருப்பினும்,வைகாசி மாதம் நடைபெறவுள்ள பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,சபரிமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் கூறுகையில்,”சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை 12 உறுப்பினர்களைக் கொண்ட வேத சுவாமிகள் வழிநடத்துவார்கள்.ஆனால்,பூஜை நடைபெறும் நாட்களில் கோவிலின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்”,என்று கூறினார்.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…