“போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” -ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!

Published by
Edison

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் நம்புவதாக இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் புடினை தொடர்புகொண்டு  பேசியதாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:

“உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனைக்கு அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும்,உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் கவலைகள் குறித்தும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபருக்கு தெரிவித்தார்.குறிப்பாக உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நாடு திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்,என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,இந்தியா தனது நடுநிலைமையை கைவிட வேண்டும் என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக ரஷ்யாவின் உலகளாவிய கண்டனத்தில் சேர வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

6 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

7 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

10 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago