paytmspoof என்ற போலி paytm செயலி மூலம் மோசடி செய்த 3 பேர் கைது.
நம்மில் பெரும்பாலானோர் பண பரிமாற்றத்திற்கு இன்று googlepay, phonepe மற்றும் paytm போன்ற செயலிகளை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயலிகள் மூலமாகவும் மோசடி செய்து ஏமாற்றும் கும்பல் இன்று பெருகி வருகிறது.
paytmspoof என்றால் என்ன?
paytmspoof என்ற போலி செயலியின் செயல்பாடு என்னவென்றால், செலுத்தாத பணத்தை செலுத்தியது போன்று காட்டும். அதாவது பணத்தை செலுத்தியதற்கான பில்லை காட்டும். ஆனால், வாங்கி கணக்கில் பணம் மாற்றப்பட்டிருக்காது.
அந்த வகையில் paytmspoof என்ற போலி செயலி மூலம் மும்பையில் உணவக உரிமையாளரை ஏமாற்றிய 3 பேரை அந்தேரியில் உள்ள சகினாகா போலீசார் கைது செய்து உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆயுஷ் ஜக்டேல் (20), உணவகத்தில் இந்த முறையில் பணம் பரிமாற்றம் செய்ய முயன்ற போது போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன், போலி செயலி மூலம் மொத்தம் ரூ.49,400 செலுத்திய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி செயலில் இருந்து தப்பிப்பது எப்படி?
ஒருவர் பணம் செலுத்திய பின் உங்களது கணக்கில் பணம் மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக இதுபோன்ற பரிவர்த்தனைகள் நடைபெறும்போது பேடிஎம் இல் இருந்து வணிகர்கள் குறுஞ்செய்தியை பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்தியவுடன் பேடிஎம் ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும். இவ்வாறு வராவிட்டால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…