கொரோனா காலகட்டத்திலும் குறையாத ஜாதி வெறியைக்கண்டிக்கிறோம் – மக்கள் நீதி மையம்!

Published by
Rebekal

கொரோனாவால் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ள இந்த காலகட்டத்திலும் தலித் இன மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய நீதிக்கேடுகளை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் தலித் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளும் இந்த பேரிடர் காலத்தில் நடந்து வருகிறது என மக்கள் நீதி மையம் சார்பாக அக்கட்சியின் ஆதி திராவிட நல மாநில செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் இந்த 144 போடப்பட்டுள்ள காலகட்டத்திலும், தலித் இன மக்களுக்கு எதிராக கொலைகள்- 14, மலக்குழி மரணம்- 4, பாலியல் வன்புணர்வு – 5, சாதி ஆணவப்படுகொலைகள்- 2, சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்- 5, தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை- 3, கல்வி நிலையங்களில்சாதியப் பாகுபாடு- 1, மயானம், மயானப்பாதை பிரச்சினை- 2, அரசுப் பணியாளர்களின் பாரபட்சம்-3,கொத்தடிமை- 1, தாக்குதல்கள்- 41 ஆகியவை நடைபெற்றுள்ளது.

தெரிந்தே இத்தனை மரணங்கள் மற்றும் கொடுமைகள் என்றால் தெரியாமல் எவ்வளவு இருக்கும். எனவே மக்கள் நீதி மையம் இந்தச்சாதி வெறியினை வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அரசு நிர்வாகமும் ஜாதி ஆதிக்கப்போக்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுத்திட வேண்டும் எனவும் மக்கள் நீதிமயம் வலியுறுத்துவதாக பூவை ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

51 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

1 hour ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago