கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மத்திய அரசு கூறுகையில், கொரோனா இழப்பீடு வழங்குவத்தில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது. மருத்துவர்கள் நிறையபேர் போலி சான்றிதழ்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது.
நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிடவேண்டியது அவசியமாகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றே கூறினோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கூறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கை வருகின்ற திங்கள்கிழமை ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் விரிவாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…