எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு.
கர்நாடகாவில், சிவமொக்காவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சையான முறையில் பேசியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு
இந்த பகுதியில், சுமார் 60,000 முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு வாக்குகள் எங்களுக்கு வேண்டாம். தேசியவாத முஸ்லிம்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும், பாஜக ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொரு சமூகமும் பலனடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சியில், இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். எவரும் இந்துக்களை தாக்கத் துணியவில்லை. பாஜக அல்லாத எந்த அரசும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா இந்த கருத்து தெரிவித்த போது கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா உடனிருந்தார். வரும் மே-10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…