எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு.
கர்நாடகாவில், சிவமொக்காவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சையான முறையில் பேசியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு
இந்த பகுதியில், சுமார் 60,000 முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு வாக்குகள் எங்களுக்கு வேண்டாம். தேசியவாத முஸ்லிம்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும், பாஜக ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொரு சமூகமும் பலனடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சியில், இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். எவரும் இந்துக்களை தாக்கத் துணியவில்லை. பாஜக அல்லாத எந்த அரசும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா இந்த கருத்து தெரிவித்த போது கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா உடனிருந்தார். வரும் மே-10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…