Categories: இந்தியா

தமிழக விவசாயிகளை மதிக்கிறோம்.! மேகதாது மட்டுமே ஒரே தீர்வு.! கர்நாடக து.முதல்வர் பேட்டி!

Published by
மணிகண்டன்

காவேரி நதியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை தர வலியுறுத்தி தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அண்மையில் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம், காவேரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்திலும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்கு தொடர்ந்து திறந்துவிட வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,  இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என விளக்கம் அளித்தது

இந்நிலையில், இன்று கர்நாடகா மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார் , ‘ இன்று, நாங்கள் எங்கள் சட்ட வல்லுனர்களை சந்தித்து ஆலோசித்தோம்.  5,000 கனஅடி தண்ணீர் திறக்க காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதே உண்மை.

கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யவில்லை. கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கு தமிழக விவசாயிகள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்களும் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். . இதனை தீர்க்க ஒரே வழி காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது மட்டுமே. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கும் உதவும் என்பதே எங்கள் கருத்து என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

4 minutes ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

34 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

4 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

5 hours ago