Siddharamiah KN [Image- Twitter/@Siddaramaiah]
கர்நாடக மக்களின் நலன்களைக் காப்பதற்கு நாங்கள் எப்போதும் கைகோர்ப்போம் என சித்தராமையா உறுதி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே யார் முதல்வராக வேண்டும் என இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. கார்கே, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வராக சித்தராமையாவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வரை டிகே சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வராக பதவியேயேற்கவுள்ள சித்தராமையா, கர்நாடக மக்களின் நலன்களைக் காக்க நாங்கள் எப்போதும் கைகோர்த்து பாடுபடுவோம். வெளிப்படையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்க, எங்களது உத்தரவாதங்களை செயல்படுத்துவதற்கும் காங்கிரஸ் கட்சியில் நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.<
/p>
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…