Congress MP Rahul Gandhi [Image source : India Today]
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை இடங்களுக்கும் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பில் இருந்து வருகிறார். விரைவில் தேர்தல் வர உள்ளதால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இன்று ஷாஜப்பூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தின் பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறுகையில், காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை தெரிய வரும். இதனை கொண்டு அவர்களின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்றார்.
இதுவரை அவர்களின் சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆளும் அரசு எடுக்கவில்லை. பாஜகவின் எம்எல்ஏக்கள், எம்பிகளுக்கு எந்தவித அதிகாரமும் பங்களிப்பு இருப்பதில்லை. அந்தந்த துறை கேபினேட் செயலாளர்கள் மற்றும் 90 அதிகாரிகளைக் கொண்டுதான் நாடே இயங்கி வருகிறது. அதிகார வர்க்கமும், ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகளும் தான் நாட்டை வழிநடுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அதானி விவகாரத்தை நான் கையில் எடுத்தேன். உடனே அடுத்ததாக எனது மக்களவை எம்பி பதவி ரத்து செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் உண்மையை பேசி வருகிறேன். நாட்டின் துறைமுகம், விமான நிலையம், உட்கட்டமைப்புகள் என எல்லா துறையிலும் தற்போது அதானியே காணப்படுகிறார். ஒவ்வொரு நாளும் அதானி விவசாயிகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்.
ஊடகங்கள் மோடிஜியை 24 மணி நேரங்களும் காட்டுகிறார்கள். சிவராஜ் சிங் சவுகானை காட்டுவார்கள், ஆனால் எங்களை காட்ட மாட்டார்கள். இதற்கு காரணம் ஊடக நண்பர்களின் ரிமோட் கண்ட்ரோல் அதானி கையில் உள்ளது என்றும் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…