மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தான் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியின் வெற்றியை அம்மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பலர் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு பின்பு மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சில தொண்டர்கள் உயிரிழந்த நிலையில் இந்த கலவரம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னான கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கலவரத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் சாஞ்சுக்த மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த பாகுபாடுமின்றி அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இந்த இரண்டு லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…