மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லா அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலமிழக்கச் செய்யும் வகையில் வலைவீசி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளது. மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லோ அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது ஹவுரா மாவட்ட தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவரது எம்எல்ஏ பதவியை இன்னும் அவர் ராஜினாமா செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரக் கூடிய நிலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் பிற கட்சிகளுக்கு செல்வதும் பதவியை ராஜினாமா செய்வதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…