மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லா அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலமிழக்கச் செய்யும் வகையில் வலைவீசி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளது. மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லோ அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது ஹவுரா மாவட்ட தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவரது எம்எல்ஏ பதவியை இன்னும் அவர் ராஜினாமா செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரக் கூடிய நிலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் பிற கட்சிகளுக்கு செல்வதும் பதவியை ராஜினாமா செய்வதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…