கொரோனா மூன்றாம் அலை எப்போது தொடங்கும்? நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்!

Published by
Rebekal
  • கொரோனாவின் இரண்டாம் அலையை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
  • செப்டம்பர் அல்லது ஆக்டொபரில் தொடங்கவுள்ள மூன்றாவது அலைக்கு தயாராக வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் வீரியம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையிலும் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது. அதுபோல, தினசரி உயிரிழப்பும் முன்பை விட அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் மூலமாக இந்தியா கொரோனா இரண்டாம் அலையை சிறப்பாக நிர்வகித்து எதிர்கொண்டு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா முதல் அலையை இந்திய எதிர்கொண்ட விதம் மிக சிறப்பாக இருந்ததாகவும், அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதேசமயம் இரண்டாம் அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா இரண்டாம் அலை விரியமானது என கூறவில்லை எனவும், ஆனால் அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளால் தான் இரண்டாம் அலை மிக வேகமாக பரவியதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆக்சிஜன் வங்கிகளை உருவாக்கி, ஆக்சிஜன் விநியோகத்திறகு தொழில்துறையின் உதவிகளை ஏற்படுத்திக்கொண்டு இரண்டாம் அலையினை சிறப்பாக நிர்வகித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நியாயமாக நாம் பணியாற்றி இருப்பதால் கொரோனாவை சிறப்பாக கையாண்டு இருப்பதால், புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது குறைந்திருந்தாலும், கொரோனாவின் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் தெளிவாக தெரிவித்திருப்பதாகவும், இந்த மூன்றாம் அலை இளம் தலைமுறையினரை அதிகம் தாக்கும் என கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் அலை செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் தொடங்கலாம் எனவும், இதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் சிறப்பாக மேற்கொள்வதுடன், மருத்துவ கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

13 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago