கொரோனா மூன்றாம் அலை எப்போது தொடங்கும்? நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்!

Published by
Rebekal
  • கொரோனாவின் இரண்டாம் அலையை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
  • செப்டம்பர் அல்லது ஆக்டொபரில் தொடங்கவுள்ள மூன்றாவது அலைக்கு தயாராக வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் வீரியம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையிலும் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது. அதுபோல, தினசரி உயிரிழப்பும் முன்பை விட அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் மூலமாக இந்தியா கொரோனா இரண்டாம் அலையை சிறப்பாக நிர்வகித்து எதிர்கொண்டு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா முதல் அலையை இந்திய எதிர்கொண்ட விதம் மிக சிறப்பாக இருந்ததாகவும், அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதேசமயம் இரண்டாம் அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா இரண்டாம் அலை விரியமானது என கூறவில்லை எனவும், ஆனால் அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளால் தான் இரண்டாம் அலை மிக வேகமாக பரவியதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆக்சிஜன் வங்கிகளை உருவாக்கி, ஆக்சிஜன் விநியோகத்திறகு தொழில்துறையின் உதவிகளை ஏற்படுத்திக்கொண்டு இரண்டாம் அலையினை சிறப்பாக நிர்வகித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நியாயமாக நாம் பணியாற்றி இருப்பதால் கொரோனாவை சிறப்பாக கையாண்டு இருப்பதால், புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது குறைந்திருந்தாலும், கொரோனாவின் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் தெளிவாக தெரிவித்திருப்பதாகவும், இந்த மூன்றாம் அலை இளம் தலைமுறையினரை அதிகம் தாக்கும் என கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் அலை செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் தொடங்கலாம் எனவும், இதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் சிறப்பாக மேற்கொள்வதுடன், மருத்துவ கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

1 hour ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

2 hours ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

6 hours ago