தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி எங்கே? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

Published by
Rebekal

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொகள்ளாத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தாமாக முன்வந்து தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே சீராக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனவும், தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், டிசம்பர் 31 வரையில் வழங்கப்பட உள்ள தடுப்பூசி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகள் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி வாங்க முடியுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருத்துவ கட்டமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தடுப்பூசி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மூலமாக வழங்கப்படக்கூடிய தடுப்பூசி குறித்து கண்காணிக்க மத்திய அரசு ஏதேனும் திட்டம் வகுத்து உள்ளதா எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தடுப்பூசி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடியை எப்படி அரசு செலவிட்டுள்ளது என்றும், இந்த நிதியிலிருந்து ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி ஆய்வுக்கு மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கான விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது எனவும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

26 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

42 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago