கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO -விடம் விரைவில் ஒப்புதல் பெறவேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்!

Published by
Rebekal

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி அஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெளிநாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையே தங்கள் நாடுகளுக்குள் அனுமதித்து வருகிறது.

எனவே கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் அந்த தடுப்பூசியை போட்டவர்கள் வெளிநாடு செல்வது சற்று சிக்கலாக உள்ளது. எனவே மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேற்குவங்கத்தில் ஆரம்பத்திலிருந்து மற்றும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தான் போடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காததால் கோவாக்சின் தடுப்பூசி போட்ட மாணவர்கள் பலரின் வெளிநாட்டு பயணம் தடைப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கோவாக்சின் தடுப்பூசி போடாதவர்கள் சர்வதேச பயணிகள் எவ்வித சிரமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் விரைவில் ஒப்புதல் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

22 minutes ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

1 hour ago

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…

2 hours ago

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…

4 hours ago

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…

4 hours ago

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

5 hours ago