கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…? பின்னணி என்ன…?

Published by
லீனா

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…?  

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.

எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்படி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பசவராஜ் பொம்மை அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

யார் இந்த பசவராஜ் பொம்மை..?

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

மெக்கானிக்கல் இன்ஜினீயரான பசவராஜ், தனது அரசியல் வாழ்க்கையை  ஜனதா தளத்துடன் தொடங்கினர். அதன்பின் கர்நாடகா சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இருமுறை கர்நாடக மேலவைக்கு தார்வாட் உள்ளூர் அதிகாரிகளின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜகவில் பசவராஜ்..!

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனதா தளம் கட்சியை விட்டுவிட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன்பின் இவர், கர்நாடகா மாநிலத் சட்டமன்ற தேர்தலில், காவேரி மாவட்டத்தில், ஷிகாகான் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த பசவராஜ் பொம்மை..?

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.ஆர்.பொம்மையின் மகன்தான் பசவராஜ் பொம்மை. இவருக்கு வயது 61. இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988 -1989 இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராக பதவி ஏற்பது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே  கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.தேவ கவுடாவின் மகன் எச்.டி.குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பாவின் இடத்தை நிரப்பிய பசவராஜ் பொம்மை 

பசவராஜ் பொம்மை 2008-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த போதில் இருந்தே, இவர் எடியூரப்பாவிற்கு மிகவும் நெருக்கமான ஒரு நபராகவும், எடியூரப்பா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீர்வளத்துறை அமைச்சராகவும், அதன்பின், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், தற்போது எடியூரப்பாவின் இடத்தை நிரப்பும் வண்ணம், கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவை போல லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான்.

பசவராஜ் பொம்மை பதவியேற்பு..!

பசவராஜ் பொம்மை கழுத்தில் காவி துண்டுடன், ராஜ்பவனில் முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு, ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல் எடியூரப்பா உட்பட, பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Published by
லீனா

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago