Categories: இந்தியா

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

Published by
murugan

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளில், ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று தெரிகிறது. அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும்  மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்: 

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 62-85 இடங்களும், பாஜக 100-122 இடங்களைப் பெறலாம் எனவும் மற்ற கட்சிகளுக்கு 14-15 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ராஜஸ்தானில் பாஜகவுக்கு 80-90 இடங்களும், காங்கிரசுக்கு 94-104 இடங்களும், மற்றவர்களுக்கு 14-18 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸ் 18 இன் கருத்துக்கணிப்பின்படி ராஜஸ்தானில் பாஜக 111 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 74 இடங்களில் வெற்றிபெறும் எனவும் மற்றவர்களுக்கு 14 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 200 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன பெரும்பான்மை எண்ணிக்கை 100 ஆகும்.

மத்தியப் பிரதேசம் மாநிலம்: 

ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பு மத்தியப் பிரதேசத்தில் பாஜக 118-130 இடங்களையும், காங்கிரஸ் 97-107 இடங்களையும், மற்றவர்கள் 0-2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 0, சமாஜ்வாதி கட்சி 0 கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 118-130 இடங்களையும், காங்கிரஸ் 97-107 இடங்களையும், மற்றவர்கள் 0-2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 0, சமாஜ்வாதி கட்சி 0 கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன பெரும்பான்மை எண்ணிக்கை 116 ஆகும்.

சத்தீஸ்கர் மாநிலம்:

இந்தியா டிவி -சிஎன்எக்ஸ் கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம். மாநிலத்தில் காங்கிரஸ் 46 முதல் 56 இடங்களில் வெற்றிபெறும் எனவும், அதே நேரத்தில் பாஜக 30 முதல் 40 இடங்களில் வெற்றிபெறும் எனவும், இதில் 3 முதல் 5 இடங்களில் மற்றவர்கள் வெற்றிபெறும் எனவும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆஜ் தக் மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 36-46 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் எனவும், மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள் 1-5 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 46 ஆகும்.

தெலுங்கானா மாநிலம்: 

ஜன் கி பாத்  கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் காங்கிரஸ் 58-68 இடங்களையும், பிஆர்எஸ் 46-56 இடங்களையும், பாஜக 4-9 இடங்களையும் மற்றவர்களுக்கு 0 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, தெலுங்கானாவில் காங்கிரஸ் 63-79 இடங்களையும், பிஆர்எஸ் 31-47, பாஜக 2-4  மற்றவர்களுக்கு 0 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 60 ஆகும்.

மிசோரம் மாநிலம்: 

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி,  ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 10-14 இடங்களில் வெற்றிபெறும் எனவும்,  எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 15-25  இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 5-9 இடங்களில் வெற்றிபெறும் எனவும், பாஜக 0-2 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 14-18 இடங்களிலும், எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 12-16  இடங்களிலும், காங்கிரசுக்கு 8-10 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் , மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள் 12-16 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோராமில் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 21 ஆகும்.

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

39 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

51 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago