யார் பொய் சொல்வது ? நீங்களே முடிவு செய்ங்க ..ராகுல் காந்தி பதில்

Published by
Venu
  • சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர் ராகுல் காந்தி தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
  • யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், புதிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடிற்கு மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது  எல்லா நேரங்களிலும் பொய் பேசுவார்.இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர் ராகுல் காந்தி தான் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில்,ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவரது கூறுகையில்,  இந்தியாவில் எங்கும்  முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தேன். ஆனால், அதே வீடியோவில்  முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இதனால் யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
Published by
Venu

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

16 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

32 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago